<?xml version="1.0" encoding="utf-8" standalone="yes"?>
<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
  <channel>
    <title>அகநானூறு on Technology Enlightened</title>
    <link>https://pprakash.me/tags/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/</link>
    <description>Recent content in அகநானூறு on Technology Enlightened</description>
    <generator>Hugo</generator>
    <language>en</language>
    <copyright>&amp;copy; &lt;a href=&#34;https://github.com/p-prakash/&#34;&gt;Prakash P&lt;/a&gt; 2015 - 2023</copyright>
    <lastBuildDate>Sun, 08 May 2016 07:19:38 +0000</lastBuildDate>
    <atom:link href="https://pprakash.me/tags/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/index.xml" rel="self" type="application/rss+xml" />
    <item>
      <title>அகநானூறு – 355</title>
      <link>https://pprakash.me/tamil/2016/05/08/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-355/</link>
      <pubDate>Sun, 08 May 2016 07:19:38 +0000</pubDate>
      <guid>https://pprakash.me/tamil/2016/05/08/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-355/</guid>
      <description>&lt;h2 id=&#34;படல---355&#34;&gt;பாடல் - 355&lt;/h2&gt;&#xA;&lt;p&gt;மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்&lt;br&gt;&#xA;இன்தீம் பல்குரல் கொம்பர் நுவலும்&lt;br&gt;&#xA;மூதிலை ஒழித்த போதுஅவிழ் பெருஞ்சினை&lt;br&gt;&#xA;வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை&lt;br&gt;&#xA;நரம்புஆர்த் தன்ன வண்டினம் முரலும்&lt;br&gt;&#xA;துணிகயம் துன்னிய தூமணல் எக்கர்த்&lt;br&gt;&#xA;தாதுஉகு தண்பொழில் அல்கிக் காதலர்&lt;br&gt;&#xA;செழுமனை மறக்கும் செவ்விவேனில்&lt;br&gt;&#xA;தானே வந்தன்று ஆயின் ஆனாது&lt;br&gt;&#xA;இலங்குவளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்&lt;br&gt;&#xA;புலந்தனம் வருகம் சென்மோ- தோழி!&lt;br&gt;&#xA;யாமே எமியம் ஆக நீயே&lt;br&gt;&#xA;பொன்நயந்து அருள்இலை யாகி&lt;br&gt;&#xA;இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே.&lt;/p&gt;&#xA;&lt;h3 id=&#34;உரexplanation&#34;&gt;உரை|Explanation:&lt;/h3&gt;&#xA;&lt;p&gt;மாமரம் நல்ல வலிமை மிக்க துளிர் விட்டுள்ளது,&lt;br&gt;&#xA;குயில் மரக்கிளையின் மேல் இனிமையாக பாடிக்கொண்டிருக்கிறது,&lt;br&gt;&#xA;மரங்கள் முதிர்ந்த இலைகளை உதிர்த்து, அதன் பெரிய கிளைகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன,&lt;br&gt;&#xA;திறமையான ஒருவர் பாலை நிலத்தின் நரம்புக் கருவியை மீட்பது போல தேனிக்கள் மென்மையாக ரீங்கரிக்கிறது,&lt;br&gt;&#xA;இந்த வெயில் காலத்தில், காதலர்கள் தங்கள் வசதியான வீட்டை மறந்து, தெளிவான நீரோடை அருகில் மணல் குன்று மற்றும் பூக்களின் மகரந்தம் ததும்பும் சோலையில் தங்கிவிடுவர்.&lt;/p&gt;</description>
    </item>
  </channel>
</rss>
