November 8, 2015

ஆத்திசூடி – உயிர் வருக்கம்

ஆத்திசூடியை எழுதியது ஔவையார். ஔவையார் என்ற பெயருடன் பல பெண் புலவர்கள் தமிழ் இலக்கிய காலக்கட்டத்தில் இருந்தனர். ஆத்திசூடியை எழுதிய ஔவையார், சோழர் காலத்தில் (12-ஆம் நூற்றாண்டு) வாழ்ந்தவராவர்.

Aathichoodi was written by Avvaiyar. There were many lady poets with the name Avvaiyar during Tamil Literature period. Avvaiyar who wrote Aathichoodi lived during Chozha period that was around 12th century.

ஔவையார் என்பது ஔவை + ஆர். “ஒளவை” என்பது வயதில் மூத்தவர் அல்லது தவப்பெண் என்று பொருளாகும். சிலசமயங்களில் அறிவில் முதிர்ச்சி அடைந்த பெண் என்பதை குறிக்கவும் பயன்படுத்தி இருக்கலாம். “ஆர்” என்பது மரியாதை நிமித்தமான விகுதி (பெயர்ப்பகுபத விகுதி).

Avvaiyar is the combination of Avvai + Aar. “Avvai” meant old lady or celibate lady. Later it might also had been used to mean intellectually matured lady. “Aar” is a respectable suffix given to important people or in plural forms.

ஔவை + ஆர் புணர்ச்சி விதியை இப்போது காண்போம்.

  • உடம்படுமெய் விதிப்படி – நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த) மெய்யெழுத்துகள் ய், வ் என்றிரண்டும் பயன்படும்.

    ஔவை(வ்+ஐ) + ஆர்

  • நன்னூல் விதி – இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும். ஏ முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும்.

  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – நிலைமொழியின் இறுதியில் நிற்கும் மெய்யின்மேல், வருமொழியின் முதலில் உள்ள உயிர் வந்து கூடி உயிர்மெய் எழுத்தாக இயல்பாக புணரும்.

இந்த விதிகளின்படி ஔவை + ஆர் ==> ஔவை + ய் + ஆர் ==> ஔவை + யார் ==> ஔவையார் என்றானது.

றம் செய விரும்பு

தருமம்/(கடமை) செய்ய ஆவலாக இருக்கவேண்டும்.

Be interested in giving alms or doing your duty.

பொருள்/Meaning:

அறம் – தருமம் / கடமை; charity, alms or duty.

றுவது சினம்

கோபம் காலப்போக்கில் தணிந்து விடும்.

Anger will get diminished gradually.

பொருள்/Meaning:

சினம் – கோபம்; Anger.

யல்வது கரவேல்

தன்னால் கொடுக்க முடிந்தவற்றை யாசிப்பவர்களுக்கு மறைக்காமல் கொடுங்கள்.

Aid the needy people as much as possible without hiding your capacity.

பொருள்/Meaning:

கர – மறைத்தல்; to hide.

கரவேல்– மறைக்காதீர்; don’t hide/conceal.

வது விலக்கேல்

ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் தானத்தை தடுக்காதீர்.

Don’t prevent others from aiding others.

பொருள்/Meaning:

ஈவது – தானம் கொடுப்பது; Charity.

டையது விளம்பேல்

உன்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி மற்றவர் அறியும்படி பேசாதீர்.

Don’t boast about your possession to others..

பொருள்/Meaning:

விளம்பேல் – வெளிப் படக் கூறுதல்; Boasting.

க்கமது கைவிடேல்

எப்போதும் முயற்சியைக் கைவிடாதீர்.

Never give up the motivation and keep trying..

பொருள்/Meaning:

ஊக்கமது – முயற்சி/உயர்ச்சி; Motivation/Enthusiasm.

ண் எழுத்து இகழேல்

எண் (கணிதம்) மற்றும் எழுத்து (மொழி) ஆகியவற்றை இகழ்ச்சி செய்யாது கற்பீர்.

Don’t degrade learning numbers and language.

பொருள்/Meaning:

இகழேல் – இகழ்ச்சி செய்யாதீர்; Degrade.

ற்பது இகழ்ச்சி

யாசகம் பெற்று வாழ்வது இழிவானது.

Living by getting alms is shameful.

பொருள்/Meaning:

ஏற்பது – யாசகம் பெறுவது; Getting alms.

யமிட்டு உண்

பிச்சை கேட்பவர்களுக்கு கொடுத்துவிட்டு பிறகு சாப்பிடு.

Eat after giving food to people who begs you.

பொருள்/Meaning:

ஐயம் – பிச்சை; Begging.

ப்புர வொழுகு

உலக வழக்கங்கள் அறிந்து அதற்கு ஏற்ப நடந்துகொள்வீர்.

Understand the custom & duties in the society and live accordingly.

பொருள்/Meaning:

ஒப்புரவு – உலகாசாரம்; Custom/Duties.

துவது ஒழியேல்

அறிவை வழர்க்கும் நல்ல நூல்களை படிப்பதை நிறுத்தாதீர்.

Never stop studying/learning.

பொருள்/Meaning:

ஓதுவது – கற்பது; Reading/Studying

ஒளவியம் பேசேல்

பொறமை எண்ணத்துடன் எவரிடமும் பேசாதீர்.

Don’t gossip or speak jealously.

பொருள்/Meaning:

ஒளவியம் – பொறாமை; Jealousy.

கஞ் சுருக்கேல்

அதிக இலாப்பத்துக்காக தானிய அளவைக் குறைத்து விற்காதீர்

Don’t reduce the quantity of grains while selling to gain more profits.

பொருள்/Meaning:

அஃகம் – தானியம்; Grains.

© Prakash P 2015 - 2023

Powered by Hugo & Kiss.