May 16, 2016

வல்லினம் மிகும்/மிகா இடங்கள்

என்ற விதியின் படி நிலைமொழியில் இ, ஈ, ஐ வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) உடம்படுமெய் தோன்றும். ஏ இருப்பின் ய் / வ் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும். என்ற விதியின் படி ய, ர, ழ என்னும் மூன்று மெய்களின் முன் மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்களும் மயங்கும். மேலே குறிப்பிட்ட "மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்கள்" யாது என்பதையும் நன்னூல் (102) விலக்கி உள்ளது. பன்னீர் உயிர் உம் க ச த ந ப ம வ ய ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய் உம் மொழி முதல் பன்னிரண்டு உயிரெழுத்துக்கள் மற்றும் க ச த ந ப ம வ ய ஞ ங ஆகிய (ஈர் ஐந்து) பத்து உயிர்மெய் எழுத்துக்கள் மட்டுமே மொழிக்கு முதல் எழுத்தாக வரும். Read more

November 8, 2015

ஆத்திசூடி – உயிர் வருக்கம்

ஆத்திசூடியை எழுதியது ஔவையார். ஔவையார் என்ற பெயருடன் பல பெண் புலவர்கள் தமிழ் இலக்கிய காலக்கட்டத்தில் இருந்தனர். ஆத்திசூடியை எழுதிய ஔவையார், சோழர் காலத்தில் (12-ஆம் நூற்றாண்டு) வாழ்ந்தவராவர். Aathichoodi was written by Avvaiyar. There were many lady poets with the name Avvaiyar during Tamil Literature period. Avvaiyar who wrote Aathichoodi lived during Chozha period that was around 12th century. ஔவையார் என்பது ஔவை + ஆர். “ஒளவை” என்பது வயதில் மூத்தவர் அல்லது தவப்பெண் என்று பொருளாகும். சிலசமயங்களில் அறிவில் முதிர்ச்சி அடைந்த பெண் என்பதை குறிக்கவும் பயன்படுத்தி இருக்கலாம். Read more

© Prakash P 2015 - 2023

Powered by Hugo & Kiss.