May 8, 2016

அகநானூறு – 355

பாடல் - 355 மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும் இன்தீம் பல்குரல் கொம்பர் நுவலும் மூதிலை ஒழித்த போதுஅவிழ் பெருஞ்சினை வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை நரம்புஆர்த் தன்ன வண்டினம் முரலும் துணிகயம் துன்னிய தூமணல் எக்கர்த் தாதுஉகு தண்பொழில் அல்கிக் காதலர் செழுமனை மறக்கும் செவ்விவேனில் தானே வந்தன்று ஆயின் ஆனாது இலங்குவளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் புலந்தனம் வருகம் சென்மோ- தோழி! யாமே எமியம் ஆக நீயே பொன்நயந்து அருள்இலை யாகி இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே. உரை|Explanation: மாமரம் நல்ல வலிமை மிக்க துளிர் விட்டுள்ளது, குயில் மரக்கிளையின் மேல் இனிமையாக பாடிக்கொண்டிருக்கிறது, மரங்கள் முதிர்ந்த இலைகளை உதிர்த்து, அதன் பெரிய கிளைகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன, Read more

© Prakash P 2015 - 2023

Powered by Hugo & Kiss.